My front page
1 min read
நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் புத்தக வெளியீடு
சிட்னி தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் சிரிக்க சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். இன்றைய அறிவியல் வளர்ச்சி நமக்கு சுகமா இல்லை சுமையா என்று சிந்திக்க வைக்கும் வகையில், சிட்னி வாழ் தமிழர்களிடமும், நம் குழந்தைகளிடமும் பட்டிமன்ற முறையில் தமிழ் மொழியின் சிறப்பு, பேச்சு கலையின் வலிமையை கொண்டு சேர்த்து நம் தமிழ் பிள்ளைகளை தமிழ்வழிப்படுத்த எடுக்கப்படும் சிறந்த முயற்சி.
பட்டிமன்றம் இலக்கியச்சுடர் திரு த. ராமலிங்கம் அவர்கள் தலைமையில், அறிவியல் வளர்ச்சி சுமையே என்று க. கரிகால்வளவன், சத்தியசீலன் வேலாயுதம், பிரபாகர் ஜெயராமன் பேச இருக்கின்றனர். அதை மறுதலித்து அறிவியல் வளர்ச்சி சுகமே என்று ராஜேஷ், இந்துமதி சிறீனிவாசன், தனபால் கணபதி அவர்கள் தங்கள் வாதத்தை வைக்க உள்ளனர்.
இதனோடு, கவிஞர் ஆறு. குமாரசெல்வம் எழுதிய சிந்தனை தூறல்கள் என்ற நூலை இலக்கியச்சுடர் திரு த. ராமலிங்கம் அவர்கள் வெளியிடுகிறார்.
மற்ற செய்திகள்
புத்தக வெளியீடு
கவிஞர் ஆறு. குமாரசெல்வம் எழுதிய “சிந்தனை தூறல்கள்” நூல் இலக்கியச்சுடர் திரு த. இராமலிங்கம் அவர்களால் வெளியிட படுகிறது.
யாழி - ராவணன் பெருவிழா
இராவணன் போற்றுதும்
சிட்னி தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் யாழி – ராவணப்பெருவிழா. தமிழர் ஒன்று கூடல் மற்றும் தமிழர் காலை நிகழ்ச்சிகள், மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. நிகழ்வில் ராவண பெரும்பாட்டன் பெரும்புகழ் போற்றும் சிறப்பு பேச்சு நடைபெறுகிறது.
Enquiry and Feedback
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.